Thursday, November 18, 2010

போதை ...

டாஸ்மாக்'இல் மட்டும் கிடைப்பது அல்ல
நாள் முழுதும் கணினி முன் இணைய தளத்தில் இணைந்து
கிடப்பதும் தான்.
கைபேசி'யில் கை வலிக்க SMS forward செய்வதும் தான்.
அம்மாவின் சமையலுக்காக'வும் அக்காவின் அன்பு வருடலுக்காக'வும்
அமெரிக்கா'வில் ஏங்குவதும் தான்.
நாட்டை பற்றியே கவலை படாத தலைவர்களுக்காக வீட்டை பற்றியே
கவலைபடாமல் போஸ்டர் ஓட்டுவதும் தான்.
வாழும் வள்ளுவரே என்றும், கலியுக கம்பனே என்றும்
தன்னை தானே புகழ்ந்து கொள்வதும் தான்.
தன்னை மறந்த நிலையை தரும் எல்லாமே போதை தான்.
மது'வாலும் கிடைக்கும், மாது'வாலும் கிடைக்கும்
புகழாலும் கிடைக்கும், பதவி'யாலும் கிடைக்கும்
போதை கொள்ளாதவன் மனிதன் இல்லை
போதை இல்லையேல் மனிதனே இல்லை ....

1 comment:

Chiju said...

In one word - Lovely!